This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

16 ஏப்ரல், 2009

ஓட்டையோடு ஒன்பது.. உடைந்ததோடு பத்து! -கிழக்கான் ஆதம்-

செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று  -முதுமொழிக் காஞ்சி-

தமிழர் வாழ்வியல் ஆதாரங்கள் வரலாறுகள் என அனைத்தும் இன்று புலிகளின் நலன் சார்ந்ததாக  அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் தமிழர் வரலாற்றை நோக்கி ஆராய நினைக்கும் எவருக்கும் தமிழர் வாழ்வின் ஆதாரத்தை எடுத்துக்காட்டுகின்ற வரலாற்றுப் பதிவுகளில் எல்லாம் புலிகளின் பணபலத்தையும் அவர்களின் பணத்துக்கு வால்பிடிக்கின்ற ஆய்வாளர்களின் கையாடள்களையும் காணக்கூடியதாகவுள்ளது.

கண்னை மூடிக்கொண்டு ஆதரவளிக்கின்ற படித்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களும் பிரதானமான பல தவறுகளை இலங்கையிலும் மற்றும் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலும் செய்தே வருகின்றனர். இவ்வாறு மாற்றத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளதுதான் இலங்கை தமிழர் வரலாறு. இதை தற்போது படிக்கின்ற போது ஆயுதபோராட்டத்திற்கு சார்பான நிலைக்கு இதில் உள்ளீடுகள் புகுத்தப்பட்டுள்ளதை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.

புலிகளின் கைவரிசை இங்கேயும் காட்டப் பட்டிருப்பதுடன் தமிழ்பேசுபவர்களின் (தமிழர்களின்) உண்மையான வரலாற்று நிலையை தற்போதைய போராட்டத்தினூடாக இதற்கு முந்திய காலத்து அரசியல் சார்ந்த மிதவாத போராட்டத்தின் யதார்த்த நிலையை மறைக்க முற்பட்டிருப்பதை காணலாம். தற்போது தமிழ் பேசும் (தமிழர்) சமூகம் ஆயுதபோராட்டதின் வீழ்ச்சியூடாக இதை உணர்ந்து கொண்டாலும் இந்த ஆவணப் படுத்தல்களிலிருந்து நிஜமான சரியான தமிழ் பேசும் மக்களின் (தமிழர்களின்) வரலாற்றை தூசுதட்டி அடுத்த சந்த்தியினருக்கு சரியாக வழங்குவது இன்றைய சமூக ஆவலர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கடமையாகும்.

இத்தகையதொரு கைங்கரியத்தை நாம் செய்யத் தவறுவோமானால் இலங்கையில் வாழப்போகும் தமிழர்களின் வாழ்கையில் பல சுனாமிகளுக்கு அது வழி வகுக்கும். காரணம் புலிகளால் எல்லாப் இடங்களிலும் தமிழர் வரலாற்றில் புகுத்தப் பட்டிருக்கும் ஆயுதவாத வாரலாற்றுப் படிமம் பின்னால் வரும் சந்ததிகள் அரசியல் ரீதியான சிக்கல்களுக்கு தாங்கள் முகம் கொடுக்க நேரிடும் போதெல்லாம் முன் சந்த்தியினர் செய்த அதே தவறைச் செய்து தங்களின் இரத்த்த்தை ஓட்டிக் கொள்வது மட்டுமன்றி தொடர்ந்து இலங்கையில் வாழப்போகும் தமிழர்கள் தங்கள் வாழ்கையை கையில் தூக்கும் பைகளில் வைத்து வாழவைத்துவிடும் அபாயமும் இதில் உண்டு.

இதை எழுதும் போது மிகவும் பாரிய தவறு ஒன்றை உணர்கிறேன் சில நாட்களுக்கு முன்பு நான் விடுமுறை சென்றபோது எனது நெருங்கிய நண்பர்  ஒருவர் சொன்னார் “நீங்கள் தமிழ் பேசும் ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிக்கும் போது “தமிழர்கள்” என்று குறிப்பிடாமல் தமிழ் பேசுவர்கள் என்று குறிப்பிடுங்கள் என்று”  நான் ஏன்? எனக் கேட்டேன் “தமிழர்கள் என்று எங்களை (முஸ்லீம்களை) புலிகளோ அல்லது வடக்கில் வாழும் மக்களோ ஏற்றுக் கொள்ளவில்லையே” என்றார் அப்போதுதான் நான் விழித்துக் கொண்டேன் இங்கேதான் எவரோ ஒருவர் தமிழர்கள் தொடர்ந்து பிரிந்தே இருக்க வேண்டும் என்ற கனவுடன் எங்கோ ஒரிடத்தில் எழுதிய ஒரு பிரிவினைவாதம் இங்கே சமூகத்தை எவ்வளவு பாதித்து இருக்கிறது என்று.

இங்கேதான் முஸ்லீம்களும் மற்றும் தாய்மொழியை தமிழாக்க் கொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டும் “தமிழர்” என்பது தமிழ் மொழி நமக்கு தந்த கௌரவமான அந்தஸ்த்து அதை தட்டிப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது தமிழர் என்று சொல்ல புலிகளுக்கு எவ்வளவு அந்தஸ்து உண்டோ அதைவிடக் கூடுதலான உரிமை நமக்கும் உண்டு இந்த உரிமையை நாம் இப்போது விட்டுக் கொடுப்போமானால் எதிர் காலத்தில் தமிழர் என்ற வரையறைகுள் நீங்கள் இல்லை என  ஒதுக்கப்பட்டுவிடுவோம் தைரியமாக அனைவரும் பாவியுங்கள் தமிழர் என்ற பலர்பால் சொல் தமிழ் பேசுகின்ற அனைத்து சமூகத்துக்கும் போதுவானது அதில் பிரிவினை வேண்டாம் ஆனால் நமக்குள் வேறுபாடான மதக் கலாச்சார பண்பாடுகளை கொண்ட சமூகங்கள் இருக்கின்றன அவைகளை அந்தந்த சமூகங்கள் பேனிக்கொள்ளட்டும் அதுவே தமிழ் சமுகங்களுக்குள் ஒற்றுமையான வாழ்வை அமைத்துத் தரும்.

இது உலகில் போதுவான ஒரு அம்சம். நாம் வாழும் உலகை  நோக்குவோமானால் உலகில் வாழும் அனைவரும் அவ்வாறான தங்களின் தாய்மொழியின் அடயாளத்தை பேனியே வருகின்றனர். ஆங்கிலேயர், போக்துக்கீசர், பிரஞ்சுக்கார்ர், அல்பேனியர், அராபியர், சீனர், மலாயர், மலையாளத்தார், தெலுங்கர் எனும் அனைத்து சமூகங்களும் தங்களின் தாய் மொழியினால் அடயாளப்படுத்தப்படுவதே தவிர அது ஒரு மத அல்லது சமூகப் பிரிவுக்குள் கட்டுப்பட்டதல்ல. 

இவ்வாறு சகல துறைகளிலும் நாம் விடும் சின்னச் சின்ன தவறுகளில் தொடங்கி பாரிய சிக்கல்கள் வரை அனைத்தும் நம் சமூகங்களால் இனம்காணப்பட்டு அவற்றின் வேர்களை அறுத்தெறிய இப்போதிலிருந்தே தமிழ்  சமூகத்தை சார்ந்த புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இவைகளை வெளிக்கொணர்ந்து அவற்றின் உண்மைத் தன்மையை நம் மக்களிடம் கொண்டு சென்று நமது சமூகத்தின்  ஆரோக்கிய வாழ்விற்கு வழிசமைக்கப் பாடுபடவேண்டும்.

இன்றைய இலங்கை தமிழர் சமூதாய அமைப்பில் பல நல்ல சிந்தனைவாதிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் சமூகப் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கின்றனர் அவர்கள் தங்களின் யதார்த்தவாதத்தினை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல முன்வரவேண்டும் திரித்து சொல்லப்படும் எதைக் கண்டாலும் அவைகளுக்கான யதார்த்தநிலையை உடனே தங்களுக்குத் தெரிந்த ஏதாவது வழியில் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

மேலே எழுதியுள்ள முதுமொழிக் காஞ்சி எதைக் கூறுகிறது என்றால் “பகைவரை வெல்வதைவிட தம்மை மேன்படுத்திக் கொள்வது சிறப்பானதாகும்” ஆகவே நமது சமூகத்தை மேன்படுத்துவதற்காக தங்களின் சமூகப் பொறுப்பை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

சமூகப் பொறுப்பு என்பதால் புலிகளின்  கொடியுடன் சகல நாடுகளில் வலம் வருவது சமூகப் பொறுப்பல்ல அது வானத்தைப் பார்த்து நாய் ஊளையிடுவது போன்றது. காரணம் புலிகள் ஆயுதத்தை கீழே வைத்து சரணடைய வேண்டும் மற்றும் சொந்த மக்கள் மீதான புலிகளின் நெருக்குதல்கள் தொடர்ந்தால் அவர்கள் மேற்கத்தைய நாடுகளில்  தடை செய்யப் படுவார்கள் என்பதையெல்லாம் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருமுன்னரே பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் மேற்கத்திய நாடுகள் புலிகளுக்கு அழகாக விளக்கிச் சொல்லியிருந்தனர். அதை நக்கலாக புலிகளின் தத்துவாசிரியர் மறைந்த அன்டன் பாலசிங்கம் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அவர் இறுதியாக லன்டன் அலெக்சாந்திரா பிளேசில் ஆற்றிய உரையில் கூறுகியிருந்தார். ஆனால் அதைக் கேட்டு சிந்தித்துச் செயற்படத்தான் அன்றும் இன்றும் புலிகளும் அவர்களின் வால்களும் மறந்துவிட்டன.

அன்று விசில் அடித்து மறைத்தனர் இன்று கண்ணீர் விட்டு அத்தகைய மிக முக்கிய விடயங்களை மறைக்கின்றனர். இதைப் படிக்கின்ற புலிகளின் ஆதரவாளர்கள் அந்த மாவீரர் தின விளக்கவுரையை யூ டியூபிலிருந்து ஒரு முறை விசில் சத்தங்கள் அற்ற அமைதியான சூழலில் மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் இன்று நடக்கிற எல்லா சர்வதேசங்களின் புறக்கணிப்புக்களும் ஏன் எனத் தெரியவரும்.

ஆகவே சர்வதேசம் புலிகளையும் புலிகளின் ஆதரவாளர்களையும் அதன் பெயரில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களையும் இன்று புறக்கனிக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நீங்கள் “பத்தோடு பதினொன்று” என்று அவர்களின் வேண்டுகோள்களை எல்லாம் புறக்கணித்ததால் இன்று உங்களை அவர்கள் “அத்தோடு இதுவுமொன்று” என்று புறக்கனிக்கின்றனர்.

ஆகவே பல வரலாற்றுத் தவறுகளை செய்த தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் அவைகளில் இருந்து மீண்டெழுந்து வெளியில் வராமல் மீண்டும் அதே தவறுகளை செய்து கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.

உலக அரசியல் சாணக்கியர்கள் அனைவரையும் தாம் வென்று ஆட்சி அமைத்ததாக கூறி தாங்கள் தனிநாட்டை  அமைத்துவிட்டு உலக அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக கூறிய கற்பனாவாதிகளான புலிகளும் அவர்களின் அமைப்புகளும் புலிவால்களும் செயற்பட்டு வந்ததானது அவர்களின் அரசியல் சமூக முதிர்ச்சியின் வெளிப்படாகும். அதையும் ஏற்றுக் கொண்ட பல மூளை(லை)சாலிகள் கல்விமான்களை நாம் நோக்குவோமானால் அவர்கள் புலிகளின் தனிநாட்டுக் கனவு என்ற ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதை எழுதும்போது எனக்கு ஞாபகம் வருகிறது சில தினங்களுக்கு முதல் பி.பி.சி தமிழோசைக்கு பேட்டி அளித்த புலிகளின் பத்திரிகையாளர்  டேவிட் நிராஜ் “ஆயுத போராட்டத்தால் வெற்றி பெற முடியாது என்பதை புலம் பெயர்தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனவே உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்துகின்றனர்” எனத் தெரிவித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஆயுத போராட்டத்தால் மட்டும்தான் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற முடியும் என அதிகமான தனது எழுத்துக்கள் மூலமும் படைப்புக்கள் மூலமும் மக்களை உசுப்பேத்திவிட்ட டேவிட் நிராஜ் இன்று தான் தப்புச் செய்யவில்லை மக்களே தப்புச் செய்தனர் என மீசையில் மன்னொட்டாத கதை கூறுவதை வைத்து இவரொரு உண்மையான சமூக உணர்வுள்ள ஊடகவியலாளரா? அல்லது பண உணர்வுள்ள ஊடகவியலாளரா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

அன்று உசுபேத்தி நீங்கள் மக்களை சிந்திக்க விடாததன் விளைவு இன்று அவர்களின் அதிகமான சொந்தங்களை தாய் மண்ணில் காணாதுபோன திசையரியாது அம்மக்கள் தள்ளாடுகின்றனர். அந்த மக்களுக்காக மீண்டும் மீண்டும் புலிகளின் பணத்துக்கான தங்களின்  சார்புப் போக்கை விடுத்து உண்மையான தமிழர்களின் சமூக விடுதலைக்காக செயற்படுங்கள்.

நீங்கள் செய்த ஆய்வுகள் மற்றும் கூறிய விடயங்கள் எதுவும் சர்வதேசத்தாலும் இலங்கையாலும் ஏற்றுக் கொள்ளப்படாதது மட்டுமன்றி புலிகளாலும் அத்தகைய ஆய்வுகளுக்கு ஏற்ப வெற்றியடைய முடியவில்லை. இதிலிருந்தே தங்கள் கணிப்பின் தவறுகளை உணர்ந்து கொள்ளுங்கள் இப்போதும் புரியவில்லை என்றால் நீங்கள் எழுதிப் படைத்த உண்மையின் தரிசனம் உற்பட சில ஆக்கங்களையாவது மீண்டும் ஒரு முறை  நீங்களே கேட்டுப்பாருங்கள் நீங்கள் எங்கெங்கு பிழை விட்டீர்கள் என்பது தெரியும்.

நான் தங்கள் மீதுள்ள கோபத்தில் எழுதவில்லை இதுவே நிஜம். நமது மக்கள் மென்மேலும் பலிகடாக்களாக்க மட்டும் முற்பாடாதீர்கள் அவர்களை காப்பாற்றுவது நமது அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். “முட்டாள்களுக்குத்தான் ஒரு வழி மூளைசாலிகளுக்கு பல வழி”  போராட்டம் தோற்றால் என்ன? தமிழர்களின் மீட்சிக்கு அவர்களிடம் இருக்கும் தவறுகளை மட்டும் கழைய வழியமைத்தால் போதும் தமிழீழம் தானாக மிளிரும்.

சமூக அக்கரை என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை ஒரு சிலருக்கு மட்டும் கடவுளால் வழங்கப்பட்ட வரம் அதற்கு காரணம் ஒவ்வொறுவரும் ஒவ்வொறு வகையான சிறப்பாற்றலுடன் இவ்வுலகில் உள்ளனர். அத்தகைய மானிட வர்க்கத்தில் இந்த ஊடகத்துறையினர் அந்த சமூகங்களின் மாற்றத்துக்கு மிகவும் முக்கிய காரணியாக இருக்கின்றனர். தனிப்பட்ட ஒரு ஊடத்துறை சார்ந்த ஒருவரின் சிந்தனைப்போக்கு ஒரு சமூகத்தின் கருத்தாக மாற்றம் பெறும் வல்லமை பெற்றதாகும்.  ஆகவே அத்தகைய பெருமைக்குரியவர்கள் மிகவும் சிந்தித்து செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

நமது தமிழ் பேசும் சமூகத்தின் தவறுகள்பல இன்று கட்டாயம் கழையப்பட வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கு பயப்படுவதற்கோ அல்லது அடங்கிப்போவதற்கோ எதுவுமில்லை உள்ளதைச் சொல்வோம் நல்லதைச் செய்வோம் வெற்றியும் பெறுவோம்.

புலிகளைச் சார்ந்து பிரச்சாரம் செய்வோர் பல பிழையான தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். அதற்கு உதாரணமாக கூறுவதாயின் புலிகளின் பிரச்சாரத்திற்கும் கணிப்புக்களுக்கும் எதிர்மாறாக கருணா அம்மானின் பிரிவின்போது புலிகளின் வெருகல் தரையிரக்கமும் அவர்களின் கிழக்கின் மீதான தாக்குதல்களின் போது அந்த மக்களின் உணர்வுகளும் முற்று முழுதாக புலிகள் இயக்கத்தை கிழக்கில் புறக்கணிப்பதாகவே இருந்ததை கூறலாம்.

இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. 2004ம் ஆண்டு நாலாம் மாதம் என்று நினைக்கறேன் (திகதி சரியாக ஞாபகமில்லை) மட்டகளப்பு செங்கலடியில் உள்ள திரைப்பட மாளிகையில் (தியேட்டரில்) கில்லி திரைப்படம் பார்க்க போயிருந்தோம். அப்போது அந்த தியேட்டருக்கு வெளியில் வீதியில் அதிக கூட்டமாக மக்களும் இளைஞர்களும் காணப்பட்டனர் அப்போது அங்கே ஒரு வெள்ளை நிற வேனில் நான்கு இளைஞர்கள் வந்தனர் அவர்கள் அங்கே கூடியிருந்த மக்களிடம் தாங்கள் அவசரமாக போகவேண்டும் வழிவிடுங்கள் என்றனர் மக்கள் அதை கவனிக்காமல் நிற்க அதிலிருந்த நாள்வரும் ஒருவர் அல்லது இருவருடைய கையில் கைக்குண்டுடன் இறங்கிவந்து நாங்கள் புலிகள் வழிவிடுங்கள் என்றனர் அப்போதும் யாரும் அதை காதில் வாங்கவில்லை உடனே அவர்கள் நாங்கள் பிரபாகரனின் ஆட்கள் வழி விடுங்கள் என்றனர் அடுத்த நிமிடத்தில் அங்கு கூடியிருந்த அனைவரும் அந்த நால்வர் மீதும் பாய்ந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் அவ்விடத்திலேயே இரண்டுபேர் அல்லது மூவர் குற்றுயிராக்கப்பட்டனர் தப்பித்த ஒருவர் அல்லது இருவர் வேனை திருப்பிக்கொண்டு வந்த வழியே தப்பிச் சென்றனர் மாட்டிக் கொண்டவர்களை அருகிலிருந்த இரானுவத்தை வரவழைத்து இராணுவத்திடம் தமிழ் மக்களால் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் எதைக் காட்டுகிறது கிழக்கு மக்களின் புலிகள் மீதான வெறுப்பையே காட்டுகிறது இதற்கு காரணம் கருணாவின் பிரிவு அல்ல. தங்கள் சொந்த பந்தங்கள் தாங்கள் நம்பியிருந்த புலிகளாலேயே வெருகல் தரையிரக்கத்தின்போது துரோகிகள் என சுட்டுக் கொள்ளப்பட்டதாகும்.

தாங்கள் காலகாலமாக காட்டிக் காத்துவந்த புலிகளை அவர்களே பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதென்பது மனவியல் ரீதியாக அந்த மக்கள் புலிகளின் தப்பான அனுகுமுறையால் அடைந்த துன்பத்தின் வெளிப்பாடு மட்டுமே. தாங்கள் வளர்த்த கடா மார்பில் பாய்வதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுபோன்றதோரு அனுகுமுறையைத்தான் தற்போது வன்னி மக்களின் விடயத்திலும் புலிகள் கடைப்பிடிக்கின்றனர் ஆகவே எதிர்வரும் காலங்களில் வடக்கில் வாழும் தமிழர்களாலும் புலிகள் இயக்கம் புறக்கணிக்கப்படப் போவது உறுதியாகும்.

புலிகளின் இயக்கத்திற்கான ஆதரவுத் தளம் தற்போது புலம்பெயர் மக்களிடம் மட்டுமே காணப் படுகின்றது அது இலங்கையில் அவர்கள் வாழ அருகதையற்றவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவு. எதையும் புலிகளுக்காக சாதிக்கப் போவதில்லை இதை தந்தை பெரியாரின் பானியில் சொல்வதானால் “ நமது நாட்டு பணத்தைப் போலவே நம் அரசியலும் வெளிநாட்டில் செல்லாது” எனலாம்.

கடந்த காலத்தில் தீர்க்க தரிசனமாக புலிகளின் தலைவர் ஒன்றைக் கூறியிருந்தார் அதாவது புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனைவரும் தமிழினத் துரோகிகள் என்பதாகும். அது மட்டும் நிச்சயம். அவர்களின் இந்த தூரோகம்தான் தமிழனத்தை மூன்றாம் தர பிரஜைகளாக இலங்கையில் மாற்றியது வெள்ளிடைமலை.

இன்றும் பல சந்தர்ப்பங்களில் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இன்னும் அரசியல் மற்றும் சிந்தனாவாதிகளும் தங்கள் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் பல தவறுகளை தொடர்ந்து புதுப்பித்தே வருகின்றனர். இவைகள் தங்கள் சமூகத்தை பாரதூரமான வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை  இவர்கள் உணர முற்படுவதாக இல்லை.

 எப்படி இலங்கை வாழ் தமிழ் மக்களால் ஓட்டையோடு ஒன்பது உடைந்த்தோடு பத்து என தற்போது புலிகள் நிராகரிக்கப்படுகின்றனரோ இதே நிலை காத்திரமாக செயற்படாத சகல தரப்பினர் மீதும் தொடரவே போகின்றது அதை செய்விப்பதே இப்போதைக்கு சமூகத்தை நேசிக்கும் சகலரின் பணியாகவும் இருக்கப்போகிறது. இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை அவர்களது மனச்சாட்சியை கேட்டு அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.  (திருக்குறள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக