This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

18 ஜூன், 2009

துரோகி, இனவாதி, எட்டப்பன்!

எழுதிப் படிச்சு அறியாதவன்தான் 

உழுது ஒளச்சு சோறு போடுறான்!. 

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி 

நல்ல நாட்டைக் கூறு போடுகிறான்!

இவன் - சோறு போடுறான்
அவன்-  கூறு போடுறான்...!' (பட்டுக்கோட்டையார்)

புலி எனும் எலி கிலி பிடித்து வீழ்ந்தவுடன் விழி பிதுங்கிய புலம்பெயர் புலிக் கூட்டம் இன்று சனி பிடித்து கிறுக்குடன் அலைகிறது

முன்னொரு காலத்தில் முருங்கமரக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த புலிகளுக்கு பல பிரச்சார ஊடகங்கள் இருந்தன இன்றும் அவை இருக்கின்றன. அவர்களுக்கு அந்தக் காலத்தில் செய்திகள் எழுதுவதற்கும், ஆராச்சிகள் செய்வதற்கும், ஆய்வுகள் நடாத்துவதற்கும், ஒரு விடயம் இருந்தது அதுதான் புலிகள். அதுகள் எலியாக மடிந்த பின்னர் தற்போது எழுதவோ அல்லது விவாதிக்கவோ வார்தையோ அல்லது வாதமோ இல்லாமல் போனதால் பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்களாக அவைகளும் அதன் விசுவாசிகளும் கிளம்பியுள்ளனர். அந்தப் பட்டங்கள் மூன்றுவகை ஒன்று “துரோகி” இரண்டாவது “இனவாதி” மூன்றாவது “எட்டப்பன்”.

வஞ்சிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்! -கிழக்கான் ஆதம்-

தான்டி வந்தேன் கடலை!, வாங்குவேன் உன் உடலை!, அணிவேன் மலையாய் - உன் குடலை!, அனுப்புவேன் சுடலை, - ஆனால் என்- முருகன் கட்டளை இடலை!, அதனால் நான் உன்னைத் தொடலை!

பழைய படமொன்றில் நடிகர் சிவாஜி கணேசன் பேசிய வரிகள் இவை இன்றைய நாட்களில் பல சூடான கருத்தாடல்கள் எமது இணையத்தளங்கள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. என்றும் இவைகளைக் கண்டு நாங்கள் சளைக்கப்போவதில்லை. காரணம் இவர்களை விட சூடும் கோபமும் இவர்களைக் குறித்தும் புலிகளைக் குறித்தும் நியாயமாக எமக்குத்தான் எழ வேண்டும். காரணம் இவர்களால் வாழ்கையை இழந்தவர்கள் நாங்கள்தான்! இன்றைய இளைஞர்கள்.