உயிர்களை உருவாக்கும் பூமி
உயிராக இருக்கும் காற்று
மனிதனை உயிர் வாழச்செய்யும் மரங்கள்!
அந்த மரங்களுக்குள் ஒரு தீவு
அதுவே எம் தாய்பூமி
அன்பைக் காட்டுவதிலும் சரி அடித்துக் காட்டுவதிலும் சரி அதிக துணிச்சல்காரர்கள் பிறப்பெடுக்கும் பூமியும் இதுவே இயற்கை தன் அழகையெல்லாம் இத்தீவில் கொட்டியிருப்பதைப்போலவே பஞ்ச பூதங்களின் குணங்களும் இங்கு வாழ்பவர்களிடம் அப்படியே காணப்படுகின்றது.
ஆச்சரியக்குறிகள், கேள்விக்குறிகள், வியப்புக்குறிகள் என பலதரப்பட்ட வாழ்கையின் வடிவங்கள் இம்மக்களின் வாழ்கையாக இருக்கிறது. ஒவ்வொறு சிங்களக் குடிமகனின் வீட்டிலும் ஆகக்குறைந்தது ஒரு இராணுவ சிப்பாயின் புகைப்படத்திற்காவது மரியாதை செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு தமிழ் மகனின் வீட்டிலும் அடயாளம் தெரியாமல் மறைந்துபோன ஒரு உறவுக்காவது அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு முஸ்லிமின் விட்டிலும் ஒரு விதவை கனவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். என்றாலும் இவர்களின் கண்களில் என்றுமில்லாதவாறு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கவலை கலப்பில்லாத ஒரு சிரிப்பும் அவ்வப்போது வந்து மறைகின்றது.