This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

13 மே, 2009

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

உலகம் முழுவதும் இன்று புலிகளின் ஆதரவுப் பிரச்சாரப் பீரங்கிகளால் தமிழீழத்தின் சாத்தியத்தன்மை பற்றி பல உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் புலிகளின் படுதோல்வியையும் அந்த அமைப்புச் சார்ந்தவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையும் தமிழ் மக்களின் பார்வையிலிருந்து மறைக்க முற்படுகின்றனர்.

இப்படிப்பட்ட பம்மாத்து உக்திகளிலொன்றுதான் நோர்வேயில் தமீழீழ வாக்கெடுப்பு என்று கூறி அவர்களே வாக்குச் சாவடிகளை அமைத்து அவர்களே அதற்கு வாக்களித்து அவற்றை அவர்களின் ஊடகங்களூடாக பிரச்சாரப் படுத்தி என்ன பலனை அடையப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை அதிலும் மொத்த தமிழீழத்தை ஆதரிக்கும் தமிழ் மக்கள் புலம்பெயர் பனிரெண்டு இலட்ச்சத்தில் இரண்டாயிரம்பேர்கள் மட்டும் என்பது வேறுகதை.

இத்தகைய செயற்பாடுகள் புலிகளின் ஆதரவாளர்களை தவிர யாரால் கண்டு கொள்ளப்படுகிறது எந்த சர்வதேசத்தினர் இவற்றை கண்டு கொள்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல் மாட்டு மந்தைகள் போல் புலிகளின் பிரச்சாரங்களை நம்பி வேலையை விட்டுவிட்டு வாக்களிக்கச் செல்பவர்களும் மற்றும் இதனைக் கூறி நாளை தமிழீழம் கிடைத்துவிடும் என்பதுபோல கருத்துச் செல்பவர்களும் பாவம் உலகத்தை அறியாதவர்கள்.

மக்கள் தொலைக்காட்சியில் நேற்றையதினம் தமிழிழம் சாத்தியம்தான் என்பதுபோல் கலந்துரையாடல் ஒன்றில் மூன்று உலக மகா புத்திசாலிகள் கருத்துக்கள் சொல்லியிருந்தனர். அவர்கள் இலங்கையரல்ல என்ற காரணத்தினாலோ என்னவோ இலங்கைத்தமிழர்கள் என்றால் யார் தமிழர் என்ற வரையரைக்குள் எத்தனை சமூகங்கள் இருக்கின்றன அவர்களின் மத்தியில் புலிகளின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்பது உற்பட எதுவும் அவர்களுச் சரியாகத் தெரியவில்லை. ஏதோ அவர்கள் புலிகளின் பிணாமிகளினால் காதில் ஓதப்பட்ட தகவல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆராச்சிகள் செய்து தங்களின் கண்டுபிடிப்புக்களை வெளியிடுவது போன்று அவற்றை வெளியிடுகின்றனர்.

அந்த அன்புக்குரியவர்கள் தொப்புல் கொடி உறவுகள் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் அது இந்தியாவோ அல்லது சீனாவோ அல்லது ரஷ்யாவோ ஆயுத உதவிகளும் மற்றும் பணம் பயிற்சிகள் வழங்குவதினூடாக இலங்கை இராணுவத்தினரால் புலிகளை வெற்றி பெற்றிருக்க நிச்சயம் முடியாது. அப்படி இராணுவ பலத்தினால் மட்டும் புலிகளை வெற்றி கொள்ள முடியுமானதாக இருந்திருந்தால் இலங்கையில் இந்திய அமைதிப்படையிருந்த காலத்தில் ஒரு சில மாதங்களுக்குள் புலிகளை இந்திய இராணுவத்தினர் அழித்தொழித்திருப்பார்கள். அவ்வாறு செய்ய முடியாமல் போனமைக்குப் பிரதான காரணம் மக்கள் அன்று புலிகள் அமைப்புக்கு அளித்துவந்த ஆதரவும் பாதுகாப்புமாகும். 

அன்றைய நிலையைவிட பலநூறு மடங்கு பலம்வாய்ந்தவர்களாகவிருந்த புலிகள் இன்று மிக இலகுவாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கு புலிகள் மீது மக்களுக்கிருந்த வெறுப்பே பிரதான காரணமாக இலங்கை அரசுக்கு உதவியது. அன்று எவ்வாறு புலிகள் அமைப்பு சகல மக்களின் நேசத்திற்குள்ளாகியிருந்ததோ அதேபோல் இன்று புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பிரதான காரணம் புலிகள் அமைப்புப் பலமான சக்தியாக மக்களால் கட்டியெழுப்பப்பட்டவுடன் அவர்கள் கடைப்பிடித்த சர்வதாதிக்க சித்தார்ந்தமாகும் இச் சித்தார்த்தமானது உலக அளவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவும் இலங்கையில் அவர்களை தனிமையும் படுத்தியிருந்தது.

புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக இலங்கையில் வாழும் சகல தமிழ் பேசும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டிருக்க இன்று தமிழ்நாட்டிலிருந்து புதிதாகப் புலிகளுக்காக வக்காலத்துவாங்க முற்படுகின்ற சிந்தனாவாதிகள் இலங்கையின் உரிமைப்பிரச்சினை பற்றியோ அல்லது இலங்கைத் தமிழரின் வரலாறு அவர்களின் இன்றைய வாழ்நிலை பற்றியோ எதையும் தெரிந்து கொள்ளாமல் தங்கள் சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் கூறி இன்று தமிழீழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு என்று கூறியதனூடாக இவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் சிந்தனாவாதிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் அதாகப்பட்டது புலிகள் இன்றைய காலகட்டத்தில் மக்கள் மனங்களிலும் மற்றும் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் புத்திசாலிகளினாலும் ஆதரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் புலிகள் உங்களை ஒரு பொருட்டாக் கூட கருதியிருக்க மாட்டார்கள். அப்படிக் கருதுபவர்களாயின் இதற்கு முன்னைய காலங்களில் புலிகளின் ஏஜென்டுகள் என்றாவது உங்களைக் கண்டு கொண்டனரா அல்லது வாடகைக்கு அமர்த்தினரா என்பதை நீங்களே உங்களைகேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

புலிகளால் இன்று இலங்கையின் எந்தத் தரப்பாரினதும் ஆதரவை வெல்ல முடியாமல் போனதனால்தான் உங்களை போன்றவர்களைப் பயன்படுத்தி அவர்களின் ஆயுட்கால பண வங்கியின் முதலாளிகளான புலம்பெயர் தமிழர்களை புல்லரிக்கச் செய்வதனூடாக பண வரவுகளைப் பேண நினைக்கிறார்கள்.

அதே போன்றதொரு நடவடிக்கைதான் இன்று புலிகளால் ஆரம்பிக்கப் பட்டிருக்கும் தமிழீழத்தை அங்கிகரிக்கும் வாக்குச்சாவடிகளாகும். இதற்கு முதல் இவ்வாறான சில விடயங்களை இந்தியாவில் அவர்களின் பணத்துக்கு ஆசைப்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகளில் நடாத்தி அவற்றுக்கு பணத்தினால் வாக்குகளை வாங்கி அவர்கள் விரும்பிய செய்தியினை முடிவாக அறிவித்தனர். அது எவ்வித மாற்றத்தையோ அல்லது பலனையோ தமிழகத்தில் அளிக்கவில்லை என்பது வேறுவிடயம்.

புலிகளால் இவ்வாறு நடாத்தப்படுகின்ற சகல ரீதியான போராட்டங்களும் தமிழ் நாட்டில் எடுபடவில்லை என்பதையே அண்மைய நாட்களாக தமிழகத்தில் உள்ள மக்களை பி.பி.சியின் தமிழோசை கண்ட பேட்டிகளைக் கேட்கும்போது உணரமுடிகிறது. சாதாரண பொதுமக்கள் இந்த புலிகள் அமைப்பைப்பற்றியோ அல்லது அவர்களின் பிரச்சாரம் பற்றியே எதையும் கண்டு கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் நாட்டில் வாழும் ஒரு பாமர மகனின் நிலை எவ்வாறெனின் அவர் காலையில் எழுந்தவுடன் தனது வீட்டுக்கு வினியோகிக்கப்பட்டிருக்கும் தினசரிப் பத்திரிகையை எடுத்து முதல் பக்கத்தைப்பார்பார் அதில் இந்தியா குறித்தசெய்திகளை பார்க்கும்போது இலங்கை அல்லது வெளிநாட்டுச் செய்திகள் கண்ணில் பட்டால் உடன் அதை தவிர்த்து அடுத்த பக்கத்தைப் புறட்டுவார் அப்பக்கத்திலும் அதே கொள்கையைப் பேணுவார். அடுத்த பக்கம் இவ்வாறு சில பக்கங்களை மேலோட்டமாகப் பார்கும்போதே அவருக்கு வேலை வந்துவிடும் அப்படியே அந்தப்பத்திரிகையை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார் மறுபடியும் அடுத்த நாள் அடுத்த பத்திரிகை இவ்வாறானதே தமிழ்நாட்டில் தமிழர்களின் உண்மையான வாழ்நிலை. மட்டுமல்லாது தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக பார்க்கப்படும் தொலைக்காட்சிதான் மக்கள் தொலைக்காட்சி என்பது வேறுவிடயம்.

இதில் பெண்களைக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் பல வருடங்களாக தொடராகப் பார்த்துவரும் நெடும் தொடர் நாடகங்களைப் பார்பதற்கே அவர்களுக்கு நேரம் குறைவு என்பதே அவர்களின் அன்றாட முனங்களாகும். இத்தகைய சமூதாய அமைப்பில் தமிழகத்து மக்கள் வாழ்வதால் அவர்களுக்குத் இலங்கைத் தமிழர்கள் மற்றும் அங்கு நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அதிகமாகத் தெரியாது என்பதுவே எதார்த்தமானதாகும்.

எனவே அங்கு புலிகளின் பணத்துக்கு வேலைசெய்யும் சக்திகளால் மக்கள் இலங்கையின் அரசினால் கொலைசெய்யப்படுவதாகக் கூறி சில வேளைகளில் சிலரை உசுப்பேத்திவிட முடிகிறது.

இதனை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் இந்தியாவில் ஒரு இலட்ச்சம் புலிகள் மக்கள் ஆதரவுடன் பயிற்ச்சி பெறுகிறார்கள் நாளை இலங்கை இராணுவத்திக்கு எதிராக வந்து போரிட்டு தமிழீழத்தை மீட்பார்கள் என்றெல்லாம் புலிகள் கதைவிடுவது வெறும் பம்மாத்துக்காட்டுவதாகும்.

உண்மையில் இலங்கையில் களநிலை வெற்றி கொள்வதில் மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்களின் மனநிலையை வெற்றிகொள்வதிலும் புலிகள் படுதோல்வியடைந்தவர்களாகவே உள்ளார்கள். 

உண்மையில் இன்று இலங்கை அரசின் மிகத் துணிச்சலான அரசியல் நகர்வுகளையும் இராணுவத்தினரின் வீரமிக்க வெற்றிகளையும் பார்த்து இலங்கையில் சகல இனத்தவர்களும் பெருமைப்பட்டவர்களாக உள்ளார்கள் என்பதே யதார்த்தமாகும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்ட புலிகளின் பினாமிகளும் அவர்களின் பணத்துக்கு வால்பிடிக்கும் சக்திகளும் தங்களின் பணப்பலத்தினூடாக தற்போது தங்களுக்கு ஆதரவான சக்திகளையும் அவர்களின் கருத்துக்களை வாடகைக்குப் பெற வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

இலங்கை மக்கள் புலிகளை ஆதரித்திருந்தால் நான் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போன்று இலங்கை இராணுவத்தினரால் ஒரு சிறிய அளவு கூட புலிகளின் தளங்களை நெருங்கியிருக்க முடியாது மாறாக மக்கள் புலிகளை வெறுப்பதினூடாக புலிகளிடமிருந்து ஒரு மீட்பாளரை மக்கள் தேடிக் கொண்டிருந்ததால் தற்போதைய அரசு அதை துணிச்சலாக செய்தபோது அதற்கு முழு ஆதரவையும் வழங்குகின்றனர் அதனாலேயே சர்வதேச அரசுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் புலிகளை “ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையே இன்றைய இலங்கையின் எதிர்க் கட்சியைக் கூட அவர்களின் தார்மீக அரசுக்கு எதிரான நிலையிலிருந்து திருப்பி அவர்களும் அரசின் இராணுவ முன்னெடுப்புக்களை வாழ்த்துபவர்களாக மாற்றியுள்ளது நல்ல உதாரணமாகும். காரணம் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இலங்கை இராணுவம் தொப்பிக்கல எனும் குடும்பிமலையைக் கைப்பற்றியபோது அதனை மக்கள் வசிக்காத காடு எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் தற்போது இராணுவத்தினர் தாமதிக்காது தொடர்ந்து முன்னே செல்ல வேண்டும் என வேண்டிக் கொள்வது மீதமிருக்கும் அவர்களின் கட்சி ஆதரவுத் தளத்தை பாதுகாப்பதற்காகும். இதனூடாக சாதி இன மத மற்றும் கட்சி பேதமின்றி இலங்கையர் அனைவரும் இன்றைய அரசை ஆதரிக்கின்றனர் என்பது புலனாகின்றது.

இலங்கையில் தற்போது வாழும் எல்லா இன மக்களும் இன்று எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்கையை மட்டும்தான் அதற்கு தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் என்ற எந்த வேறுபாடுமில்லை. தமிழர்கள் எவ்வாறு புலிகள் இயக்கம் தனது பிள்ளைகளை பிடிப்பதாலும் கப்பம், வரி, வட்டி, கிஸ்தி என்று அறவிடுவதாலும் பல்லாண்டு காலமாக துன்பமடைந்தார்களோ அதே மாதிரியே சிங்கள மக்களும் குண்டுவெடிப்புக்கள், தற்கோலைத் தாக்குதல்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என மிகவும் துன்பமடைந்திருந்தனர். அதேபோன்றே முஸ்லீம்களும் விரட்டியடிப்புகள், கொள்ளைகள், தீவைப்புக்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் என புலிகளினால் மிகவும் துன்பத்திற்குள்ளாகியிருந்தனர் எனவே இந்த மக்கள் தற்போது ஒரு விடிவைக் உணர்கின்றனர். எனவே அவர்களனைவரும் அரசையும் அதன் வெற்றிகளையும் விசுவாசிக்கின்றனர்.

இலங்கையில் தற்போது நடக்கும் போரானது தமிழ் மக்களுக்கெதிரானதல்ல அது முற்று முழுதாக புலிகள் எனும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது மட்டுமே என்பதை இந்த அரசுக்குக் கிடைக்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதரவுத் தளத்தினூடாக விளங்கிக் கொள்ளலாம்.

இலங்கையில் 1988ம் மற்றும் 1989ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னனி ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அதனை புலிகளால் கொலைசெய்யப்பட்ட ஜனாதிபதி திரு.பிரேமதாச தலைமையிலான இலங்கை அரசு சில மாதங்களில் முற்று முழுதாக ஒழித்துக் கட்டியது அவ்வாறு ஒழித்துக் கட்டிய இலங்கையின் அப்போதைய அரசினால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை இதற்குக் காரணம் புலிகளின் பலமல்ல புலிகளுக்கு இருந்த இந்திய ஆதரவுநிலையும் தமிழ் இலங்கையிலிருந்த தமிழ் பேசும் மக்களின் ஆதவுத் தளமுமேயாகும். அந்த ஆதரவுத் தளத்தை புலிகள் தங்களின் செயற்பாடுகளினூடாக அழித்துவிட்டனர். அதனால்தான் இன்று ஆனாதரவாக இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

இன்று இலங்கையை நோக்கினும் அல்லது சர்வதேசத்தை நோக்கினாலும் புலிகள் என்ற பயங்கரவாதிகளுக்கு முற்று முழுதான எதிரான நிலையே உலக முழுவதும் காணப்படுகின்றது இதனை மறைப்பதற்காக இன்று புலிகள் அவர்களின் புலம்பெயர் தேசத்து உறுப்பினர்களூடாக யுத்தப்பிரதேசத்தில் மக்களை பழிக்கடாக்களாகப் பிடித்து வைத்துக் கொண்டு அந்த மக்கள் மீது உலகமெங்கும் காட்டப்படும் கருணையையும் ஆதரவையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர். அந்த கருணை என்ற போர்வைக்குள் புலிகளை மறைத்து காப்பாற்றிவிடவேண்டும் என்பதே புலிகளின் சர்வதேச உறுப்பினர்களின் ஒரே நோக்கமாகும்.

இந்த நோக்கம் நிச்சயம் வெற்றிபெறப்போவதில்லை என்பது திண்ணமாகும் இன்று சர்வதேசத்தின் சங்கடமெல்லாம் தமிழ்மக்களின் விடுதலைக்கு போராடுவதாக கூறிய புலிகள் இயக்கமே அவர்களை யுத்தக் கேடயங்களாக பயன்படுத்துவதோடு எந்த சர்வதேசத்தின் வேண்டுகோள்களையும் ஏற்று அவர்களை வெளியேற அனுமதிக்காததால் இலங்கை அரசிடம் அவர்களால் ஒரு நிலையை தாண்டி எதையும் கேட்க முடியாதவர்களாக உள்ளனர். 

எனவே புலிகளுக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளதாலும் புலிகளின் தமிழீழக் கோஷமோ அல்லது அவர்களின் ஆதரவோ இலங்கை மக்களிடமும் மற்றும் உலக அரங்கிலும் மழுங்கடிக்பட்டிருப்பதாலும் புலிகள் அமைப்பு மக்களின் மனங்களிலிருந்து மறைந்து நீண்ட காலமாகிவிட்டதாலும் அவர்களின் தலைமையிலான தமிழீழம் என்பது இன்றைய காலத்திற்கு சாத்தியமற்றதொன்றேயாகும்.

நாளை புலிகள் என்ற பயங்கரவாத சக்தி ஒழிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு நல்ல சுய உரிமையுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது இலங்கையில் இனவாத அரசியல் சக்திகளும் ஆயுத போராட்டத்தின் சுவடுகளும் தனாக மறைந்துபோகும்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா
மாமாயை என்னும் வனத்த்தில் அலைகிறண்டா
மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா” -பட்டினத்தார்-




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக