சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து – ஞானம்மா
அலைவார் வெகுகோடி
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே- ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
களத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் – ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ – ஞானம்மா
நலித்தே அழுவாரடி
(புண்ணாக்குச் சித்தர் - சித்தர் பாடல் தொகுப்பிலிருந்து)
இன்று விடுதலைப் புலிகளின் புகலிடமாகத் திகழும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களின் மூளைகளுக்கு பாசிச ஆய்வாளர்களினாலும் பாசிச உ(பு)ணர்ச்சிக் கவிஞர்களாலும் உட்புகுத்தப்பட்டுள்ள சொல்லியல் வாதம்தான் “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” என்ற கோஷமாகும்.