This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

18 ஜூன், 2009

துரோகி, இனவாதி, எட்டப்பன்!

எழுதிப் படிச்சு அறியாதவன்தான் 

உழுது ஒளச்சு சோறு போடுறான்!. 

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி 

நல்ல நாட்டைக் கூறு போடுகிறான்!

இவன் - சோறு போடுறான்
அவன்-  கூறு போடுறான்...!' (பட்டுக்கோட்டையார்)

புலி எனும் எலி கிலி பிடித்து வீழ்ந்தவுடன் விழி பிதுங்கிய புலம்பெயர் புலிக் கூட்டம் இன்று சனி பிடித்து கிறுக்குடன் அலைகிறது

முன்னொரு காலத்தில் முருங்கமரக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த புலிகளுக்கு பல பிரச்சார ஊடகங்கள் இருந்தன இன்றும் அவை இருக்கின்றன. அவர்களுக்கு அந்தக் காலத்தில் செய்திகள் எழுதுவதற்கும், ஆராச்சிகள் செய்வதற்கும், ஆய்வுகள் நடாத்துவதற்கும், ஒரு விடயம் இருந்தது அதுதான் புலிகள். அதுகள் எலியாக மடிந்த பின்னர் தற்போது எழுதவோ அல்லது விவாதிக்கவோ வார்தையோ அல்லது வாதமோ இல்லாமல் போனதால் பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்களாக அவைகளும் அதன் விசுவாசிகளும் கிளம்பியுள்ளனர். அந்தப் பட்டங்கள் மூன்றுவகை ஒன்று “துரோகி” இரண்டாவது “இனவாதி” மூன்றாவது “எட்டப்பன்”.

வஞ்சிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்! -கிழக்கான் ஆதம்-

தான்டி வந்தேன் கடலை!, வாங்குவேன் உன் உடலை!, அணிவேன் மலையாய் - உன் குடலை!, அனுப்புவேன் சுடலை, - ஆனால் என்- முருகன் கட்டளை இடலை!, அதனால் நான் உன்னைத் தொடலை!

பழைய படமொன்றில் நடிகர் சிவாஜி கணேசன் பேசிய வரிகள் இவை இன்றைய நாட்களில் பல சூடான கருத்தாடல்கள் எமது இணையத்தளங்கள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. என்றும் இவைகளைக் கண்டு நாங்கள் சளைக்கப்போவதில்லை. காரணம் இவர்களை விட சூடும் கோபமும் இவர்களைக் குறித்தும் புலிகளைக் குறித்தும் நியாயமாக எமக்குத்தான் எழ வேண்டும். காரணம் இவர்களால் வாழ்கையை இழந்தவர்கள் நாங்கள்தான்! இன்றைய இளைஞர்கள்.

30 மே, 2009

குடுமிபிடிச் சண்டை ஆரம்பம்.


சீமை அழியுதுண்ணு நான்
சிந்தையிலும் எண்ணலியே!,
சீமை அழியலியே-என்
சிறப்பழிஞ்ச மாயமென்ன?
மருத அழியுதுண்ணு நான்
மனசிலேயும் எண்ணலியே!
மருத அழியலியே-என்
மதிப்பழிஞ்ச மாயமென்ன? (நாட்டார் பாடல்)

இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.

19 மே, 2009

தலைவருக்கு வீர வணக்கம்! படையினருக்கு நன்றிகள்! ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்! -கிழக்கான் ஆதம்-

ஈழ மக்களின் போராட்ட வரலாற்றை திசைதிருப்பிய மாபெரும் மனிதர் சில தினங்களுக்கு முன் தனது முடிவை நிரூணயித்துக் கொண்டார். தனியாக தமிழருக்கு நாடு பெற்றுத் தருவதாக கூறிய இவர் இன்று தமிழர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து நடைபிணங்களாக அவர்களை மாற்றிவிட்டு போராடி உயிர்நீத்தார்.

வீரவணக்கம்
படுகொலைக் கலாச்சாரத்தை தமிழருக்குள் விதைத்து இன முரண்பாடுகளைத் தூண்டி இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என பாகுபடுத்தி  பேதமேற்படுத்திய ஜனநாயகவாதிக்கு வீரவணக்கம்.
வாசலில் மண்கூட்டி நேசத்துடன் கைகோர்த்து பாசத்துடன் பழகிய சின்னம் சிறுசுகளை இரத்த வாசத்துடன் இறுகிய உள்ளத்துடன் இயங்கவைத்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிதாரிக்கு எங்கள் வீரவணக்கம்

13 மே, 2009

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

12 மே, 2009

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து – ஞானம்மா
அலைவார் வெகுகோடி
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே- ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
களத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் – ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ – ஞானம்மா
நலித்தே அழுவாரடி 
(புண்ணாக்குச் சித்தர் - சித்தர் பாடல் தொகுப்பிலிருந்து)

இன்று விடுதலைப் புலிகளின் புகலிடமாகத் திகழும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களின் மூளைகளுக்கு பாசிச ஆய்வாளர்களினாலும் பாசிச உ(பு)ணர்ச்சிக் கவிஞர்களாலும் உட்புகுத்தப்பட்டுள்ள சொல்லியல் வாதம்தான் “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” என்ற கோஷமாகும்.

29 ஏப்ரல், 2009

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-

“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”
-Jon Stewart  American Actor and Comedian(1962)- 

இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.